Welcome to Sathyam Constructions
Follow us

வீடு வாங்க சரியான தருணம்தான் இது-எப்படி?

Posted on : November 6, 2018

சென்னையில் ரியல் எஸ்டேட் சரிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வீடு விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. வீடு வாங்குவதற்கு இது சரியான காலகட்டம். அதிலும் குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்குவது பொருத்தமாக இருக்கும். பொதுவாக வீடு அல்லது மனை அமைந்துள்ள பகுதி வளர்ச்சியடைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அல்லது வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதியாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். தற்போதைய நிலையில் சென்னையின் எந்தெந்தப் புறநகர்ப் பகுதிகள் வளர்ச்சி பெற்றுவரும் பகுதிகளாக இருக்கின்றனவோ. அவற்றுள் ஒன்று மேற்குச் சென்னைப் பகுதி.

நடுத்தரமான வருமானம் பெறும் குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவைப் புரிந்துகொண்ட சில ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன. சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை வளம் மிக்க பகுதியாக அறியப்படுவது ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட தென்சென்னைப் பகுதிதான். ஓ.எம்.ஆர். சாலை பெரும்பாலும் மென்பொருள் துறையினரை நம்பி உருவாக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் ஏராளம்.

அதுமட்டுமல்லாது பல்லாவரம் ரேடியல் சாலை பகுதிகளிலும் புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் சமீப காலத்தில் அதிகமாக உருவாக்கப்பட்டுவருகின்றன. ஜி.எஸ்.டி. சாலைப் பகுதியில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள ஆதனூர், மாடம்பாக்கம் பகுதிகளிலும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

அதுபோல ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பூந்தமல்லி போன்ற மேற்கு சென்னையில் புறநகர்ப் பகுதிகளிலும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்போது இந்த மேற்குப் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் விற்பனை தொய்வில்லாமல் இருப்பதாக ரியல் எஸ்டேட் துறை ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இங்கு அதிக அளவில் தொழிற்கூடங்கள் இருப்பதால் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளும் ஏற்கனவே உருவாகியுள்ளன. இவற்றை மையமாக வைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. தவிர சென்னையின் மத்திய பகுதியில் பணியாற்றும் மற்ற நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அவர்களும் வீடு வாங்குவது பெருகிவருகிறது. தோராயமாக 30 லட்சத்துக்கு இரு படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் இந்தப் பகுதியில் விற்பனைக்கு உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் சில ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுவரும் பகுதி. பொதுவாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ.எம்.ஆர். சாலையில்தான் பெரிய வில்லா மற்றும் டவுன்ஷிப் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் கட்டுமானங்கள் கவனம் செலுத்துகின்றன. பெரிய டவுன்ஷிப் திட்டங்கள் ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்னும் பல திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்படவிருக்கின்றன. இந்தப் பகுதியில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது சென்னை நகருக்குள் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பகுதி ஏற்றதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல் குறைந்த விலை வீடுகள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இங்குதான் அதிகமாக உருவாக்கப்படுகின்றன.

குறைந்த விலை வீடுகளின் தேவை மேலும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தென் சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இருக்கும் மேற்கு சென்னை பகுதி, வளம் மிக்கப் பகுதியாக ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் சென்னைப் பகுதியான பல்லாவரம் ரேடியல் உள்வட்டச் சாலைப் பகுதி, இப்போது அதிகமான குடியிருப்புகள் பெருகிவருகின்றன. அதுபோல் ஜி.எஸ்.டி. சாலைப் பகுதியான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் இப்போது வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இப்போது முதலீட்டுக்காக அல்லாமல் இருப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்குவது அதிகரித்துவருகிறது. வாங்குவதற்கும் இது நல்ல காலகட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

About Us

Beyond just business, Sathyam Construction is keen on working towards understanding their customers’ expectations of how their dream house should be and collaborates with the architects to satisfy those expectations.

Address

189/A, Kamarajar Road, Kottivakkam, Chennai, Tamil Nadu 600041

Business Hours

Monday - Friday
Saturday
Sunday
10 AM to 06 PM
10 AM to 06 PM
Holiday

© 2024 All Rights Reserved | Sathyam Constructions